நடிகையும் நஸ்ரியாவும், ரஞ்சனியும் கேரள வனத்துறைக்கு சொந்தமான யானையில் அனுமதி பெறாமல் சவாரி செய்ததால் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் திருச்சூரில் உள்ள பிராணிகள் நல வாரியத்திடம் புகார் செய்துள்ளார்.
அதில் 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் திகதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி பிராணிகள் நல வாரியத்தின் அனுமதி பெறாமல் யானைகள் மீது சவாரி செய்வது குற்றமாகும்.
ஆனால் நடிகை நஸ்ரியாவும், ரஞ்சனியும் பிராணிகள் வாரியத்தில் அனுமதி பெறாமல் யானை மீது சவாரி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்த படங்கள் இணைய தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியதால், தற்போது பிராணிகள் நல வாரிய அதிகாரிகள் இது குறித்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மேலும், இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவரும் கைதாகலாம் என கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment Blogger Facebook