0

சென்னை, 

தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா, நடிகை ரேஷ்மி மேனனை காதல் திருமணம் செய்துகொள்கிறார். இவர்கள் திருமணம் வருகிற அக்டோபர் மாதம் நடக்கிறது. 

பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன்

‘நேரம், சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, பீட்சா, ஜிகிர் தண்டா’ ஆகிய படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. ‘ஜிகிர் தண்டா’ படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது.


இவரும், ‘இனிது இனிது’ படத்தில் அறிமுகமான ரேஷ்மி மேனனும் ‘உறுமீன்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மதம் கிடைக்காததால், விரைவில் திருப்பதியில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியானது. இதை முதலில் பாபி சிம்ஹா மறுத்தார்.

திருமணம்

இதுபற்றி பாபி சிம்ஹா தரப்பில் விசாரித்தபோது, “முதலில் இந்த காதலுக்கு ரேஷ்மி வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால், இருவரும் காதலில் உறுதியாக இருப்பதால் மனம்மாறி பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.



இதைத்தொடர்ந்து இருவருக்கும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும், வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் திருமணம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ரேஷ்மி மேனன் இப்போது ‘கிருமி’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதன்பிறகு, இவர் புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. திருமணத்துக்குப்பின் அவர் சினிமாவை விட்டு விலகி, குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவார் என்று ரேஷ்மி மேனனின் குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்தார். 

Post a Comment Blogger

 
Top